புதுடெல்லி: நட்புடன் பழகிவந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது !


புதுடெல்லி: நட்புடன் பழகிவந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது !
x

புதுடெல்லியில் மருத்துவமனை ஊழியராக பணிபுரிந்துவந்த நபர் ஒருவர் நட்புடன் பழகிவந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

புதுடெல்லி,

வடகிழக்கு டெல்லியில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் 25 வயது நபர் ஒருவர் மருத்துவமனை ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் வசிக்கும் வீட்டின் அருகே ஒரு இளம்பெண் வசித்து வருகிறார். மருத்துவமனை ஊழியருடன் அந்த இளம்பெண் நட்புடன் பழகி வந்துள்ளார்.

இந்த நிலையில், அப்பெண் மருத்துவமனையில் தனது நண்பரை சந்திக்க சென்றுள்ளார். அப்போது அப்பெண்ணை யாரும் இல்லாத தனி அறைக்கு அழைத்துச்சென்று அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

நண்பரால் பாதிக்கப்பட்ட அப்பெண், போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story