தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மறைவு - பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இரங்கல்


தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மறைவு - பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இரங்கல்
x

தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தவர் விஜயகாந்த் என்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தே.மு.தி.க. நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை 6.10 மணியளவில் காலமானார். இதையடுத்து தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "விஜயகாந்த் ஒரு பழம்பெரும் நடிகரும், வல்லமைமிக்க தலைவருமாவார். தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தவர்.

சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய செழுமையான சேவைக்காக அவர் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த வருத்தம்" என்று தெரிவித்துள்ளார்.




Next Story