அசாமில் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு: ஜீன்ஸ், டி-சர்ட்டுக்கு தடை - மாநில அரசு உத்தரவு


அசாமில் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு: ஜீன்ஸ், டி-சர்ட்டுக்கு தடை - மாநில அரசு உத்தரவு
x

ஆசிரியர்கள் கண்ணியமான வகையில், தூய்மையான உடைகளை அணிய வேண்டும் என அசாம் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

கவுகாத்தி,

அசாம் மாநில பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்-ஆசிரியைகளுக்கு ஆடை கட்டுப்பாடுகளை விதித்து அசாம் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ஆண் ஆசிரியர்கள் சட்டை, பேண்ட் அணிந்து கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் ஆசிரியைகள் பள்ளிக்கு சேலை, சுடிதார் மட்டும் அணிந்து கொண்டு வர வேண்டும் என்றும் ஜீன்ஸ், டி-சர்ட், லெக்கின்ஸ் போன்ற ஆடைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆண் மற்றும் பெண் ஆசிரியர்கள் இருவரும் கண்ணியமான வகையில், தூய்மையான மற்றும் மென்மை நிறம் கொண்ட உடைகளை அணிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அசாம் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு ஆசிரியர் தனது கடமையை செய்யும் போது அனைத்து விதமான கண்ணியத்திற்கும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பணியிடத்தில் நல்லொழுக்கம், கண்ணியம், தொழில்முறை மற்றும் வேலையின் நோக்கம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் ஆடைகளை அணிய வேண்டியது அவசியமாகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story