தற்காலிக பின்னடைவு; 4 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் கருத்து


தற்காலிக பின்னடைவு; 4 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் கருத்து
x

தற்காலிக பின்னடைவை எதிர்கொண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முழுமையான அளவில் தயாராவோம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்க உள்ளது. ஆனால், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் பாஜக அதிக இடங்களில் வென்று ஆட்சி அமைக்க உள்ளது.

இந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியிருப்பதாவது:- தற்காலிக பின்னடைவை எதிர்கொண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முழுமையான அளவில் தயாராவோம். தெலுங்கானாவில் மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு நன்றி" என்று கூறியுள்ளார்.


Next Story