அரசுமுறை பயணமாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்கா பயணம்


அரசுமுறை பயணமாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்கா பயணம்
x

கோப்புப்படம்

அரசுமுறை பயணமாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று இரவு அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

புதுடெல்லி,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், அதிகாரப்பூர்வ பயணமாக நாளை அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் அங்கு பல முக்கிய கூட்டங்களில் அவர் கலந்து கொள்ள உள்ளதாகவும் நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன் தனது பயணத்தின் போது, சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டங்கள், G20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் (FMCBG) மாநாட்டு கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.

ஜப்பான், தென் கொரியா, சவுதி அரேபியா, ஆஸ்திரேலியா, பூடான், நியூசிலாந்து, எகிப்து, ஜெர்மனி, மொரிஷியஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுடனான இருதரப்பு சந்திப்புகளிலும் நிதி மந்திரி பங்கேற்கிறார். கூடுதலாக, அவர் OECD, ஐரோப்பிய ஆணையம் மற்றும் UNDP ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் தலைவர்களை சந்திக்கிறார்.

அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெல்லென் மற்றும் உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் ஆகியோரை சீதாராமன் தனித்தனியாக சந்தித்து பரஸ்பர நலன் சார்ந்த பிரச்சனைகளை விவாதிப்பார் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story