பீகார் முதல்-மந்திரிக்கு எதிராக சர்ச்சை கருத்து கூறிய முன்னாள் எம்.பி.க்கு 3 ஆண்டு சிறை


பீகார் முதல்-மந்திரிக்கு எதிராக சர்ச்சை கருத்து கூறிய முன்னாள் எம்.பி.க்கு 3 ஆண்டு சிறை
x

முன்னாள் எம்.பி. அருண்குமாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

பாட்னா,

பீகார் மாநிலம் ஜெகனாபாத் தொகுதி ராஷ்டிரீய லோக் சம்தா கட்சி முன்னாள் எம்.பி. அருண்குமார். இவர், பூமிகார் சமூகத்தினர் குறிவைத்து தாக்கப்படுவதாக குற்றம் சாட்டி, 'நாங்கள் ஒன்றும் வளையல் அணிந்து கொண்டிருக்கவில்லை. எங்கள் மரியாதையைக் குலைத்த முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் நெஞ்சைப் பிளப்போம்' என்று கடந்த 2015-ம் ஆண்டு சர்ச்சை கருத்து கூறியிருந்தார்.

இதுதொடர்பாக அருண்குமார் மீது ஐக்கிய ஜனதா தள தலைவர் சந்திரிகா பிரசாத் யாதவ் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்புக் கூறிய சிறப்பு கோர்ட்டு நீதிபதி, முன்னாள் எம்.பி. அருண்குமாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தார். அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதே வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு முன்னாள் எம்.பி.யான பப்பு யாதவ் போதிய சாட்சியம் இல்லை என்று கூறி விடுவிக்கப்பட்டார்.


Next Story