ஒடிசா முதல்-மந்திரியுடன் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் சந்திப்பு


ஒடிசா முதல்-மந்திரியுடன் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் சந்திப்பு
x

Image Courtesy : ANI

டோனி பிளேருக்கு சொந்தமான நிறுவனத்துடன் ஒடிசா அரசாங்கம் கடந்த 21-ந்தேதி இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

புவனேஸ்வர்,

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், ஒடிசா மாநிலத்தின் முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கை நேரில் சந்தித்துப் பேசினார். புவனேஸ்வரில் உள்ள நவீன் நிவாஸ் இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது மாநில பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக முதல்-மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது. டோனி பிளேருக்கு சொந்தமான டி.பி.ஐ. நிறுவனத்துடன் ஒடிசா அரசாங்கம் கடந்த 21-ந்தேதி இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த நிறுவனம் ஒடிசா மாநிலத்திற்கான பொருளாதார வளர்ச்சி கொள்கைகள் குறித்து மூலோபாய ஆலோசனைகளை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story