சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடுக்கியில் முழு அடைப்புப் போராட்டம்


சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடுக்கியில் முழு அடைப்புப் போராட்டம்
x

சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இடுக்கி மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

திருவனந்தபுரம்,

தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை சுற்றியுள்ள இடங்களை, ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக மாற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் முழுவதும் கடந்த ஜூன்10-ந்தேதி முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி இடுக்கி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி முதல் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்றைய தினம் ஐக்கிய ஜனநாயக முன்னனி (UDF) சார்பில் 12 மணி நேரம் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டடிருந்தது. இதன்படி இன்று இடுக்கியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம், மாலை 6 மணி வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story