இமாசல பிரதேசம்: எண்ணெய் லாரி தீப்பிடித்ததில் ஒருவர் பலி; 7 பேர் காயம்


இமாசல பிரதேசம்:  எண்ணெய் லாரி தீப்பிடித்ததில் ஒருவர் பலி; 7 பேர் காயம்
x

இமாசல பிரதேசத்தில், எண்ணெய் லாரி தீப்பிடித்து எரிந்ததில் சிக்கி உயிரிழந்த நபர் சுபாஷ் சந்தர் என தெரிய வந்துள்ளது

உனா,

இமாசல பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் தஹ்லிவாலா கஸ்வா பகுதியில், எண்ணெய் லாரி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் தீ அடுத்தடுத்து பகுதிகளுக்கு பரவியது. இந்த தீ விபத்தில், 15 கடைகள் எரிந்து சாம்பலாகின. இதனால், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து போயிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில வாகனங்களும் சேதமடைந்தன. தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்து உள்ளார். 7 பேருக்கு லேசான காயங்களும் மற்றும் ஒருவருக்கு பெரிய அளவில் காயமும் ஏற்பட்டு உள்ளது.

அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தீ விபத்தில் உயிரிழந்த நபர் சுபாஷ் சந்தர் என தெரிய வந்துள்ளது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story