ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள்: துணிச்சலுடன் சண்டையிட்டு விரட்டிய தாய், மகள்.. வைரல் வீடியோ


ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள்: துணிச்சலுடன் சண்டையிட்டு விரட்டிய தாய், மகள்.. வைரல் வீடியோ
x

கொள்ளையர்களுடன் தாய் மற்றும் மகள் இருவரும் சண்டையிடும் சிசிடிவி காட்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ரசூல்புரா அருகே உள்ள பைகா காலனியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நாட்டுத்துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இரண்டு கொள்ளையர்கள் புகுந்தனர்.

அப்போது வீட்டில் இருந்த தாய் மற்றும் மகள் இருவரும் துணிச்சலுடன் கொள்ளையர்களுடன் சண்டையிட்டு விரட்டினர். முதலில் தலையில் ஹெல்மெட் அணிந்தபடி வீட்டிற்குள் புகுந்த கொள்ளையனை கட்டையால் தாக்கியும், சண்டையிட்டும் வீட்டை விட்டு வெளியேற்றினர்.

இரண்டாவது கொள்ளையன் கையில் கத்தியை காட்டி மிரட்டினான். அவன் வீட்டை விட்டு வெளியேறி தாய் மற்றும் மகள் இருவரையும் தாக்க முற்பட்டான். பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் கொள்ளையனை பிடிக்க தயங்கினாலும், தாய், மகள் இருவரும் சண்டையிட்டு இரண்டாவது கொள்ளையனையும் விரட்டினர்.

இந்த சம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். அத்துடன், கொள்ளையர்களுடன் தாய் மற்றும் மகள் இருவரும் சண்டையிடும் சிசிடிவி காட்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story