2024-ம் ஆண்டு தேர்தலுக்குப்பின் இனக்கலவர பதற்றத்தில் இருந்து நாட்டை எதிர்க்கட்சிகள் கூட்டணி பாதுகாக்கும் - மம்தா பானர்ஜி


2024-ம் ஆண்டு தேர்தலுக்குப்பின் இனக்கலவர பதற்றத்தில் இருந்து நாட்டை எதிர்க்கட்சிகள் கூட்டணி பாதுகாக்கும் - மம்தா பானர்ஜி
x

2024-ம் ஆண்டு தேர்தலுக்குப்பின் இனக்கலவர பதற்றத்தில் இருந்து நாட்டை எதிர்க்கட்சிகள் கூட்டணி பாதுகாக்கும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 'இந்தியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்து உள்ளன. இந்த கூட்டணி 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, '2024-ம் ஆண்டு தேர்தலில் 'இந்தியா' வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். பின்னர் பேரழிவு, இனக்கலவர பதற்றம், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றில் இருந்து நாட்டை பாதுகாக்கும்' என்று கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலில் குறுக்கு வழியில் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளை பா.ஜனதா தொடங்கி இருப்பதாக கூறிய மம்தா பானர்ஜி, இதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஹேக் செய்ய முயன்றுவருவதாகவும் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து கேள்விப்பட்டு இருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Next Story