ஜம்மு காஷ்மீர்: உதம்பூரில் லாரி மீது கார் மோதி விபத்து - 4 பேர் உயிரிழப்பு


ஜம்மு காஷ்மீர்: உதம்பூரில் லாரி மீது கார் மோதி விபத்து - 4 பேர் உயிரிழப்பு
x

இந்த விபத்தில் காயமடைந்த ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உதம்பூர்,

ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

ஜம்மு-ஶ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் திக்ரி அருகே ஒரு குடும்பத்தினர் ஜம்முவில் இருந்து உதம்பூருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் கார் திடீரென லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் சென்ற 5 பேரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களில் 4 பேர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். அவர்களில் ஒருவர் மட்டும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story