காஷ்மீர்: 12 மாவட்டங்களில் பனிச்சரிவு ஆபத்து; அறிவிப்பு வெளியீடு


காஷ்மீர்:  12 மாவட்டங்களில் பனிச்சரிவு ஆபத்து; அறிவிப்பு வெளியீடு
x

காஷ்மீரில் 24 மணிநேரத்தில் பனிச்சரிவு ஆபத்து ஏற்படும் மாவட்டங்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.



ஜம்மு,


ஜம்மு மற்றும் காஷ்மீரில் அடிக்கடி பனிச்சரிவு ஏற்பட கூடிய பகுதிகள் உள்ளன. இதனால், சாலைகளில் பனி படர்ந்து போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுத்தி உள்ளது. இமயமலையையொட்டி அமைந்த காஷ்மீரில் நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, குளிர்காலத்தில் வெப்பநிலையும் குறைந்து காணப்படும்.

இந்த நிலையில், காஷ்மீரில் அடுத்த 24 மணிநேரத்தில் பனிச்சரிவு ஆபத்து ஏற்பட கூடிய மாவட்டங்கள் பற்றிய அறிவிப்பை ஜம்மு மற்றும் காஷ்மீரின் பேரிடர் மேலாண் கழகம் வெளியிட்டு உள்ளது.

இதுபற்றிய செய்தியில், நடுத்தர மட்டத்திலான ஆபத்து ஏற்படுத்த கூடிய பனிச்சரிவானது அனந்த்நாக், பந்திப்பூர், பாராமுல்லா, கந்தர்பால், குப்வாரா, குல்காம், தோடா, கிஷ்த்வார் மற்றும் பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில் 2 ஆயிரம் முதல் 2,500 மீட்டர் உயரத்தில் ஏற்பட கூடும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

இதேபோன்று, குறைந்த மட்டத்திலான ஆபத்து ஏற்படுத்த கூடிய பனிச்சரிவானது ரியாசி, ரஜோரி மற்றும் ராம்பன் மாவட்டங்களில் 2 ஆயிரம் முதல் 2,500 மீட்டர் உயரத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் ஏற்பட கூடும் என தெரிவித்து உள்ளது.


Next Story