தேநீர் தயாரித்தபோது சிலிண்டர் வெடித்து விபத்து.. தாய், 3 குழந்தைகள் பலி


தேநீர் தயாரித்தபோது சிலிண்டர் வெடித்து விபத்து.. தாய், 3 குழந்தைகள் பலி
x
தினத்தந்தி 30 March 2024 6:48 AM GMT (Updated: 30 March 2024 7:13 AM GMT)

எதிர்பாராதவிதமாக வீட்டின் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச்சிதறியது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள தும்ரி கிராமத்தை சேர்ந்தவர் சிவ்சங்கர் குப்தா. இவருக்கு திருமணமாகி மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை சிவ்சங்கர் வெளியே செல்ல தயாரானார். அவரது மனைவி வீட்டில் தேநீர் தயாரித்துக்கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச்சிதறியது. அதிகாலை 4 மணிக்கு ஏற்பட்ட இந்த விபத்தில் சிவ்சங்கரின் மனைவி மற்றும் 3 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிவ்சங்கர் உயிர்தப்பினார்.

இந்த சத்தம் கேட்டு எழுந்த அக்கம்பக்கத்தினர், சிலிண்டர் வெடித்து தாயுடன் குழந்தைகள் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.


Next Story