உத்தரபிரதேசத்தில் கள்ளத்தொடர்பை எதிர்த்ததால் மனைவி, மகள் கொலை


உத்தரபிரதேசத்தில் கள்ளத்தொடர்பை எதிர்த்ததால் மனைவி, மகள் கொலை
x

உத்தரபிரதேசத்தில் கள்ளத்தொடர்பை எதிர்த்ததால் மனைவி மற்றும் மகளை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீரட்,

உத்தரபிரதேசத்தில் உள்ள சர்தானா பகுதியில் வசித்து வருபவர் ஆஷிஷ் குமார் (வயது 38). இவர் தனது மனைவி ஜோதி(35) மகள் பவ்யா(3) ஆகியோருடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று ஆஷிஷ் குமார் தனது மனைவி மற்றும் மகளை கொலை செய்துள்ளார்.

இதற்கிடையே சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ள ஆற்றில் ஜோதி மற்றும் பவ்யாவின் உடல்கள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டன. இதுபற்றி தகவல் தெரிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், ஆஷிஷ் குமார் தனது மனைவி மற்றும் மகளை கட்டையால் தாக்கி கொலை செய்து பின்னர் அவர்களுடைய உடலை ஆற்றில் வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு மற்றொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து போலீசார் ஆஷிஷ்குமாரை கைது செய்தனர்.

முன்னதாக அவர், தனது மனைவி மற்றும் மகள் கிணற்றில் தவறி விழுந்து மூழ்கி இறந்ததாக நாடகமாடியது குறிப்பிடத்தக்கது.


Next Story