நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று பிரதமர் மோடி பதில் அளிக்கிறாா் - ராஜ்நாத் சிங் அறிவிப்பு


நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று பிரதமர் மோடி பதில் அளிக்கிறாா் - ராஜ்நாத் சிங் அறிவிப்பு
x

கோப்புப்படம்

நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று பிரதமர் மோடி பதில் அளிக்க உள்ளதாக ராஜ்நாத் சிங் அறிவித்தார்.

புதுடெல்லி,

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன.

இந்த தீர்மானத்தின் மீது நேற்று இரண்டாவது நாளாக மக்களவையில் காரசார விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மணிப்பூரில் இந்தியாவை பா.ஜ.க. கொன்றுவிட்டது என்று ஆவேசமாக பேசினார். மத்திய மந்திரிகள் ஸ்மிரிதி இரானி, அமித்ஷா ஆகியோர் அவருக்கு பதிலடி கொடுத்தனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், நம்பிக்கையில்லாத தீர்மானம் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (இன்று) பதில் அளிப்பார் என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மக்களவையில் அறிவித்தார்.


Next Story