ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இல்லை: ஜம்மு போலீஸ் விளக்கம்


ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இல்லை: ஜம்மு போலீஸ் விளக்கம்
x

உரிய பாதுகாப்பு அளிக்கும் வரை நடை பயணத்தை மீண்டும் தொடங்கப்போவதில்லை என காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

ஜம்மு,

கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப் பயணம், இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. தற்போது இந்த நடைபெயணம் ஜம்மு-காஷ்மீரின் பனிஹாலில் இருந்து மீண்டும் தொடங்கி நடைபெற்றது. காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உற்சாகமாக மூவர்ணக் கொடியை ஏந்தியபடி நடைப்பயணத்தைத் தொடர்ந்தனர்.

இந்தநிலையில் காஷ்மீரின் காசிகுண்ட் பகுதியில் நடைபெற்ற ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் பாதுகாப்பு காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் உரிய பாதுகாப்பு அளிக்கும் வரை நடை பயணத்தை மீண்டும் தொடங்கப்போவதில்லை என காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

இதுகுறித்து ஜம்மு போலீசார் கூறும்போது, ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் எவ்வித பாதுகாப்பு குறைபாடுகளும் இல்லை என்று தெரிவித்து உள்ளது. காஷ்மீரில் நடைபெற்றுவரும் ஒற்றுமை நடைபயணத்தில் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டதாகவும், பயணத்தின்போது பங்கிஹாலில் பெருங்கூட்டம் இணைவது குறித்து அமைப்பாளர்கள் எந்த தகவலும் தரவில்லை என்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் விளக்கமளித்து உள்ளனர்.


Next Story