இந்தியாவோடு விரைவாக இணைந்தால் பாகிஸ்தானுக்கு நல்லது - யோகி ஆதித்யாநாத்


இந்தியாவோடு விரைவாக இணைந்தால் பாகிஸ்தானுக்கு நல்லது - யோகி ஆதித்யாநாத்
x

கோப்புப்படம்

உலகில் பாகிஸ்தானுக்கு உண்மையான தனி அடையாளம் என்று ஏதுமில்லை என்று உத்தரப்பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார்.

லக்னோ,

பாகிஸ்தான் பூமிக்கு பாரம் என்றும் உலகில் பாகிஸ்தானுக்கு உண்மையான தனி அடையாளம் என்று ஏதுமில்லை என்றும் உத்தரப்பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சியில் இந்து மதம், இஸ்லாம், பாகிஸ்தான் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், "ஆன்மிக உலகில் பாகிஸ்தானுக்கு உண்மையான தனி அடையாளம் என்று ஏதுமில்லை. ஒன்று உண்மையானதாக இல்லாதபோது அது நீண்ட காலம் நீடிக்காது. அது இந்தியாவோடு விரைவாக இணைவது அதற்கு நல்லது. இந்து என்பது ஒரு மதமோ, ஒரு நம்பிக்கையோ, ஒரு பிரிவோ கிடையாது. இந்து என்பது ஒரு கலாச்சார பெயர். இந்து அடையாளம் என்பது ஒவ்வொரு இந்தியருக்குமான கலாச்சார குடியுரிமை.

இந்தியாவில் இருந்து ஹஜ் செல்பவர்களை, அங்குள்ளவர்கள் இந்து என்றுதான் குறிப்பிடுகிறார்கள். ஒருவரும் இந்தியர்களை ஹாஜியாக பார்ப்பதில்லை. ஒருவரும் இவர்களை இஸ்லாமியர்களாக ஏற்பதில்லை. இந்த கண்ணோட்டத்தில் பார்க்கும்போது இந்தியா ஒரு இந்து நாடு என்பது புரியும். ஏனெனில் இங்குள்ள குடிமக்கள் எல்லோரும் இந்துக்கள்தான். இந்து என்பதை மதத்தோடு, நம்பிக்கையோடு, பிரிவோடு நாம் இணைக்கிறோம் என்றால், புரிந்துகொள்வதில் நாம் தவறு செய்கிறோம் என்று அர்த்தம்" என்று யோகி ஆதித்யாநாத் கூறினார்.


Next Story