இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது உயிர்நீத்த இந்தியர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை


இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது உயிர்நீத்த இந்தியர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை
x

கோப்புப்படம்

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது உயிர்நீத்த இந்தியர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

புதுடெல்லி,

ஆண்டுதோறும் ஆகஸ்டு 14-ந் தேதி, இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை துயர நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

நேற்று இந்த நாள் அனுசரிக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடி தனது 'டுவிட்டர்' பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில், பிரிவினையின்போது உயிரிழந்த இந்தியர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

அவர் கூறியிருப்பதாவது:-

இந்த நாள், பிரிவினையின்போது உயிர்நீத்த இந்தியர்களை நினைவுகூரும் தருணம். இந்தியாவுக்கு குடிபெயரும் நிலைக்கு தள்ளப்பட்டவர்களின் போராட்டம் மற்றும் இன்னல்களை இந்நாளில் நினைவுபடுத்திக் கொள்வோம் என்று அவர் கூறியுள்ளார்.


Next Story