கிறிஸ்தவ நிறுவனங்கள் மீதான தாக்குதலை தடுக்க கோரிய மனு: சுப்ரீம் கோர்ட்டில் ஜூலை 11-ந்தேதி விசாரணை


கிறிஸ்தவ நிறுவனங்கள் மீதான தாக்குதலை தடுக்க கோரிய மனு: சுப்ரீம் கோர்ட்டில் ஜூலை 11-ந்தேதி விசாரணை
x

பெங்களூரு மறைமாவட்ட பேராயர் பீட்டர் மஷாடோ, தேசிய ஒருமைப்பாடு மன்றத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

புதுடெல்லி,

கிறிஸ்தவ நிறுவனங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுக்க கோரி பெங்களூரு மறைமாவட்ட பேராயர் பீட்டர் மஷாடோ, தேசிய ஒருமைப்பாடு மன்றத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி மூத்த வக்கீல் கொலின் கன்சால்வேஸ், நீதிபதிகள் சூர்யகாந்த், ஜே.பி.பார்திவாலா அடங்கிய கோடைக்கால விடுமுறை அமர்வு முன் முறையிட்டார்.

அப்போது, 'கடந்த மே மாதம் 57 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் சில தாக்குதல்கள் நடைபெறக்கூடும் என அஞ்சப்படுகிறது. எனவே இந்த ரிட் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும்' என்றார்.

இதற்கு நீதிபதிகள், 'நீங்கள் தெரிவித்திருக்கும் தகவல் துரதிஷ்டவசமானது. உங்களது ரிட் மனுவை கோடை விடுமுறைக்கு பின், வழக்கமான கோர்ட்டு செயல்பாடுகள் தொடங்கும் ஜூலை 11-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உறுதி அளித்தனர்.


Next Story