உலக சிறுதானியங்கள் மாநாட்டில் கோவையைச் சேர்ந்த பாப்பம்மாள் பாட்டியிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பாப்பம்மாள் பாட்டி, அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
புதுடெல்லி,
உலக சிறுதானியங்கள் மாநாட்டை டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 107 இயற்கை விவசாயியும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பாப்பம்மாள் பாட்டி கலந்து கொண்டார்.
இந்த விழாவின் போது பாப்பம்மாள் பாட்டி, பிரதமர் மோடியை சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது பிரதமர் மோடி, பாப்பம்மாள் பாட்டியின் காலை தொட்டு அவரிடம் ஆசி பெற்றார்.
Related Tags :
Next Story