5 வந்தே பாரத் ரெயில் சேவைகள்: ம.பி.யில் நாளை தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி


5 வந்தே பாரத் ரெயில் சேவைகள்: ம.பி.யில் நாளை தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி
x

மத்திய பிரதேசத்தில் 5 வந்தேபாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

போபால்,

இந்திய ரெயில்வேயின் மதிப்புமிக்க ரெயில் சேவைகளில் ஒன்றாக கருதப்படும் வந்தே பாரத் ரெயில் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது பல மாநிலங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் நாளை 5 வந்தேபாரத் ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

மத்திய பிரதேசத்தின் போபால்- ஜபல்பூர், கஜூராஹோ- போபால்- இந்தூர், கோவா- மும்பை, ஹதியா- பாட்னா மற்றும் தார்வாட்- பெங்களூரு ஆகிய வழித்தடங்கள் இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை நாளை பிரதமர் தொடங்கிவைக்கிறார்.


Next Story