சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள்-போலீசார் இடையே துப்பாக்கி சண்டை - 2 பேர் பலி


சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள்-போலீசார் இடையே துப்பாக்கி சண்டை - 2 பேர் பலி
x

கோப்புப்படம்

நீண்ட நேரம் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் போலீஸ்காரர் ஒருவரும், ஒரு நக்சலைட்டும் பலியாகினர்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் கான்கெர் மாவட்டத்தில் உள்ள ஹிதுர் வனப்பகுதியில் நக்சலைட்டுகளின் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அதனை தொடர்ந்து போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

நீண்ட நேரம் நீடித்த இந்த துப்பாக்கி சண்டையில் போலீஸ்காரர் ஒருவரும், ஒரு நக்சலைட்டும் பலியாகினர். அதைதொடர்ந்து மற்ற நக்சலைட்டுகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Next Story