ராஜஸ்தான்; கார்-பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து..! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி


ராஜஸ்தான்; கார்-பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து..! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி
x

பஸ் மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் சிகார் நகரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் நாகூரில் உள்ள தங்களது உறவினர் வீட்டின் திருமண விழாவில் கலந்து கொள்ள ஒரு சொகுசு காரில் சென்றனர். கார் சென்று கொண்டிருந்தபோது, பந்தாரி கிராமத்தில் ஒரு வளைவில் திரும்பும் போது எதிர்பாராதவிதமாக எதிர் திசையில் வந்த பஸ் மீது மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் சிக்கி காரில் இருந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய ஒரு குழந்தை உட்பட இருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்கள் ஷாருக் (வயது 22), சதாம் (வயது 28), முகமது தோகிட் (வயது 15), முகமது ஜூபர் (வயது 18), ஆசிப் (வயது 30), முகமது (வயது 17) மற்றும் முகமது ரஷீத் (வயது 24) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.


Next Story