தந்தையைக் கொன்று வயலில் வீசிய மகன் கைது..!


தந்தையைக் கொன்று வயலில் வீசிய மகன் கைது..!
x

ராஜஸ்தானில் தந்தையைக் கொன்று வயலில் வீசிய மகனை போலீசார் கைது செய்தனர்.

பரான்,

ராஜஸ்தான் மாநிலம் பரான் மாவட்டத்தில் கெர்கெடா கிராமத்தைச் சேர்ந்த கன்ஹயலால் (வயது 70) என்பவர் கடந்த ஜூன் 30-ந்தேதி அவருடைய குடிசைக்கு அருகிலிருந்த வயலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். விசாரணையில் அவரது மகன் ஹேம்ராஜ் (வயது 35) தனது தந்தையை கோடரியால் கொன்றதை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து மேற்கொண்ட விசாரணையில், இறந்தவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதும் தனியாக குடிசை அமைத்து வசித்து வந்ததும், சட்டவிரோதமாக நாட்டு மதுபானம் விற்பனை செய்ததும் தெரியவந்தது. குடும்பத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் தந்தையின் இந்த செயல்கள் ஹேம்ராஜூக்கு பிடிக்கவில்லை. மேலும், கன்ஹயலால் தனக்கு சொந்தமான நிலத்தை தன்னுடைய மூத்த மகனுக்கு கொடுக்க விரும்பியதும் ஹேம்ராஜூக்கு பிடிக்கவில்லை.

முன்னதாக, கிராமவாசிகள் சிலர் தங்களின் குடும்ப உறுப்பினர்கள் மரணத்திற்கு கன்ஹயலால் தான் காரணம் என்று கூறி அவரை மிரட்டியுள்ளனர். இதையடுத்து ஹேம்ராஜ் தனது தந்தையை கொலை செய்வதற்கும், அந்த கொலை பழியை இதற்கு முன்பு அவரை மிரட்டிய கிராமவாசிகள் மீது போடுவதற்கும் சரியான வாய்ப்பாக கருதி அவரை கொலை செய்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story