காஷ்மீரில் இந்த ஆண்டு ரூ.7 கோடி போதைப்பொருள் பறிமுதல் - 217 பேர் கைது


காஷ்மீரில் இந்த ஆண்டு ரூ.7 கோடி போதைப்பொருள் பறிமுதல் - 217 பேர் கைது
x

இதுவரை 217 போதைப்பொருள் கடத்தல்காரர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீர்போலீசார் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். பாரமுல்லா மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 217 போதைப்பொருள் கடத்தல்காரர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் வைத்திருந்த 5 கிலோ அளவிலான போதைப்பொருளை கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

அவற்றின் மதிப்பு ரூ.7 கோடி என போலீசார் தெரிவித்தனர். போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்கள், செல்போன்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டு சோதனைக்கு உட்படுத்தி வருகிறார்கள்.


Next Story