மும்பை விமான நிலையத்தில் ரூ.6.2 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் - 4 பேர் கைது


மும்பை விமான நிலையத்தில் ரூ.6.2 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் - 4 பேர் கைது
x

மொத்தம் 10 கிலோ எடை கொண்ட ரூ.6.2 கோடி மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மும்பை,

மும்பை விமான நிலையத்திற்கு நேற்றைய தினம் சார்ஜாவில் இருந்து விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் வழக்கமான சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் நடந்து கொண்ட 2 பயணிகளின் உடைகள் மற்றும் உடமைகளை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர்.

இந்த சோதனையின் போது அந்த 2 பயணிகளும் தங்கள் உடைகளில் 8 தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் மூலம், இவர்களோடு இணைந்து செயல்பட்ட மற்றொரு நபரையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இவர்களிடம் இருந்து மொத்தம் 8 கிலோ எடை கொண்ட ரூ.4.94 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த 3 பயணிகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இதே போல மற்றொரு சம்பவத்தில் துபாயில் இருந்து வந்திறங்கிய ஒரு பயணியிடம் இருந்து 2 கிலோ எடை கொண்ட ரூ.1.23 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த இருவேறு கடத்தல் சம்பவங்களின் மூலம் மொத்தம் 10 கிலோ எடை கொண்ட ரூ.6.2 கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story