ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்டிரல்-எர்ணாகுளம் இடையே சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்டிரல்-எர்ணாகுளம் இடையே சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

கோப்புப்படம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்டிரல்-எர்ணாகுளம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, ஆகஸ்டு 24, 31-ந்தேதி மற்றும் செப்டம்பர் 7-ந்தேதிகளில் இரவு 9 மணிக்கு கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து சிறப்பு ரெயில் (வண்டி எண்.06046) புறப்பட்டு, அடுத்தநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.

மறுமார்க்கமாக இதே ரெயில் (06045) ஆகஸ்டு 25-ந்தேதி, செப்டம்பர் 1, 8-ந்தேதிகளில் (வெள்ளிக்கிழமை) மதியம் 3.10 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து புறப்பட்டு அடுத்தநாள் அதிகாலை 3 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும்.

இதேபோல, தாம்பரத்தில் இருந்து ஆகஸ்டு 22, 29-ந்தேதி மற்றும் செப்டம்பர் 5-ந்தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) மதியம் 1.30 மணிக்கு சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் (06041) புறப்பட்டு, அடுத்தநாள் காலை 6.45 மணிக்கு மங்களூரை சென்றடையும். மறுமார்க்கமாக அதே ரெயில் (06042) ஆகஸ்டு 23-ந்தேதி, 30-ந்தேதி மற்றும் செப்டம்பர் 6-ந்தேதிகளில் (புதன்கிழமை) மங்களூரில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு, அடுத்தநாள் காலை 4.45 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story