பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே


பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே
x
தினத்தந்தி 21 July 2023 1:48 AM GMT (Updated: 21 July 2023 2:02 AM GMT)

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.

புதுடெல்லி,

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று இந்தியா வந்துள்ள அவர், வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.

இந்த நிலையில், இன்று அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் சந்திப்பின் போது, தமிழக மீனவர்கள் கைது, இலங்கை தமிழர்கள் நலன் ஆகியவை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story