காவி உடை அணிந்திருந்த மூவர்... குழந்தை கடத்தல்காரர்கள் என சந்தேகித்து தர்ம அடி கொடுத்த மக்கள்


காவி உடை அணிந்திருந்த மூவர்... குழந்தை கடத்தல்காரர்கள் என சந்தேகித்து தர்ம அடி கொடுத்த மக்கள்
x

சத்தீஸ்கரில் காவி உடை அணிந்திருந்த மூவரை குழந்தை கடத்தல்காரர்கள் என சந்தேகித்து மக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர்.

சத்தீஸ்கர்,

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் மூன்று சாமியார்கள் பிளாய்திரி பகுதியில் உள்ள பஸ்திக்கு சென்றுள்ளனர். காவி உடையில் இருந்த சாமியார்களை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் மூன்று சாமியார்களை கடுமையாக தாக்கினர்.

இதற்கு காரணம் குழந்தைகளுடன் சாமியார்கள் பேசியதாகவும், இதனால் குழந்தை திருடர்கள் என சந்தேகித்து இளைஞர்கள் அவர்களை கடுமையாக தாக்கியதாகவும் அப்பகுதி மக்கள் கூறினர். சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story