மத்திய பிரதேசத்தில் விபத்தில் சிக்கிய மத்திய மந்திரியின் வாகனம் - ஒருவர் பலி; 3 பேர் காயம்


மத்திய பிரதேசத்தில் விபத்தில் சிக்கிய மத்திய மந்திரியின் வாகனம் - ஒருவர் பலி; 3 பேர் காயம்
x

நர்சிங்பூர் தொகுதியில் இருந்து பா.ஜ.க. வேட்பாளராக மத்திய மந்திரி பிரகலாத் பட்டேல் போட்டியிடுகிறார்.

சிந்த்வாரா,

மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கு வருகிற 17-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில், பா.ஜ.க. சார்பில் மத்திய மந்திரி பிரகலாத் பட்டேல் நர்சிங்பூர் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.

அவர் சிந்த்வாரா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் பன்டி சாஹூவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள சிந்த்வாரா தொகுதிக்கு சென்று விட்டு, தன்னுடைய தொகுதிக்கு திரும்பினார்.

இந்நிலையில், சிந்த்வாராவின் அமர்வாரா பகுதியருகே அவருடைய கார் மற்றும் பாதுகாப்பு வாகனம் வந்து கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மோதி விபத்தில் சிக்கியது.

இதில், தனியார் பள்ளி ஆசிரியரான நிரஞ்சன் சந்திரவன்ஷி என்பவர் உள்பட 4 பேர் காயமடைந்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி ஆசிரியர் உயிரிழந்து விட்டார். இந்த விபத்தில் மந்திரி பட்டேலுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


Next Story