மேற்கு வங்கம்: ராம நவமி பேரணியில் கல்வீச்சு, வாகனங்களுக்கு தீ வைப்பு


மேற்கு வங்கம்: ராம நவமி பேரணியில் கல்வீச்சு, வாகனங்களுக்கு தீ வைப்பு
x

மோதலின் போது சிலர் வாகனங்களுக்கு தீ வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் உள்ள ஷிப்பூர் பகுதியில் இன்று ராம நவமியை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின் போது திடீரென இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது.

இந்த மோதலின் போது சிலர் கற்களை வீசி தாக்கத் தொடங்கினர். மேலும் அங்குள்ள வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்தை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அப்பகுதியில் பதற்றத்தை குறைக்க காவல்துறையினர் கொடி அணிவகுப்பு பேரணியில் ஈடுபட்டுள்ளனர். ராம நவமி பேரணியில் மோதலை ஏற்படுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story