கடும் குளிர் எதிரொலி; பஞ்சாபில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நீட்டிப்பு


கடும் குளிர் எதிரொலி; பஞ்சாபில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நீட்டிப்பு
x

5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 21-ந்தேதி வரை விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சண்டிகர்,

வட இந்திய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக டெல்லி, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான குளிர் வாட்டி எடுத்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பஞ்சாப் மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு விடப்பட்ட குளிர்கால விடுமுறை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. அங்கு 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 14-ந்தேதி(இன்று) வரை விடுமுறை விடப்பட்டிருந்தது. 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், வரும் 21-ந்தேதி வரை பஞ்சாபில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை விடப்படுவதாகவும், 6 முதல் 10-வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மட்டும் வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்படுவதாகவும் பஞ்சாப் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.


Next Story