மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தந்தை-மகள் பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தந்தை-மகள் பலி
x

விஜயநகர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் தந்தை, மகள் இருவரும் பலியானார்கள்.

விஜயநகர்:

விஜயநகர் மாவட்டம் கூட்லகி தாலுகா குத்தேகோட்டை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தா(வயது 30). இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார். அவர் அந்த பகுதியில் உள்ள ஏரிக்கரை அருகே சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவரது மோட்டார் சைக்கிளும், மற்றொரு மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டதில் கோவிந்தா மற்றும் அவரது மகள் ரிஷி ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து கூட்லகி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story