எம்.எல்.சி. தேர்தலில் பட்னாவிஸ் மேலும் ஒரு வெடிகுண்டை போடுவார்- பா.ஜனதா தலைவர் தகவல்


எம்.எல்.சி. தேர்தலில் பட்னாவிஸ் மேலும் ஒரு வெடிகுண்டை போடுவார்- பா.ஜனதா தலைவர் தகவல்
x

20-ந் தேதி நடக்க உள்ள எம்.எல்.சி. தேர்தலில் தேவேந்திர பட்னாவிஸ் மேலும் ஒரு வெடிகுண்டை போடுவார் என மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார்.

மாவட்ட செய்திகள்

மும்பை,

20-ந் தேதி நடக்க உள்ள எம்.எல்.சி. தேர்தலில் தேவேந்திர பட்னாவிஸ் மேலும் ஒரு வெடிகுண்டை போடுவார் என மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார்.

எம்.எல்.சி. தேர்தல்

மராட்டியத்தில் கடந்த 10-ந் தேதி 6 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. இதில் போதிய எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லாத போதும், சுயேச்சைகளை தங்கள் வசம் இழுத்து பா.ஜனதா 3 இடங்களை கைப்பற்றி அதிர்ச்சி அளித்தது. இந்தநிலையில் வருகிற 20-ந் தேதி 10 சட்ட மேல்- சபை உறுப்பினர்களை (எம்.எல்.சி.) தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் பா.ஜனதா 5 பேரை நிறுத்தி உள்ளது. 5 வேட்பாளர்களும் வெற்றி பெற பா.ஜனதாவுக்கு சுயேச்சை, சிறிய கட்சி எம்.எல்.ஏ.களின் ஆதரவு தேவைப்படுகிறது.

மேலும் ஒரு வெடிகுண்டு

இதுகுறித்து மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியதாவது:-

ஜூன் 20-ந் தேதி தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் ஒரு வெடிகுண்டை போடுவார். வர இருக்கும் எம்.எல்.சி. தேர்தலில் பா.ஜனதாவின் 5 வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள். தேவேந்திர பட்னாவிஸ் மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் 3 வேட்பாளர்களையும் வெற்றி பெற வைத்து அவரது திறமையை காண்பித்துவிட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.




Next Story