டோலி கட்டி தூக்கி சென்ற நிலையில் பிரசவத்தில் தாய், குழந்தை பலி


டோலி கட்டி தூக்கி சென்ற நிலையில் பிரசவத்தில் தாய், குழந்தை பலி
x

பிரசவத்தில் குழந்தை உயிரிழந்த நிலையில் ரத்தப்போக்கு காரணமாக தாயும் பலியாகி உள்ளார். சாலை வசதி இல்லாததால் டோலி கட்டி தூக்கி சென்ற நிலையில் இந்த சோகம் நேர்ந்தது.

வசாய்,

பிரசவத்தில் குழந்தை உயிரிழந்த நிலையில் ரத்தப்போக்கு காரணமாக தாயும் பலியாகி உள்ளார். சாலை வசதி இல்லாததால் டோலி கட்டி தூக்கி சென்ற நிலையில் இந்த சோகம் நேர்ந்தது.

குழந்தை பலி

பால்கர் மாவட்டம் விக்ரம்காட் தாலுகா சாவ்ரோலி கிராமத்தை சேர்ந்த பெண் தனுஜா பார்தி (வயது 19). கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் ஆன நிலையில் 7 மாதம் கர்ப்பமாக இருந்தார். கடந்த 6-ந் தேதி திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து குடும்பத்தினர் தனுஜா பார்தியை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர்.

சாலை வசதி இல்லாததால் டோலி கட்டி தூக்கி வந்தனர். அப்போது வழியில் அப்பெண்ணிற்கு குழந்தை பிறந்தது. பிறந்து சில மணி நேரத்தில் அக்குழந்தை உயிரிழந்தது.

சிகிச்சை பலனின்றி தாய் பலி

பிரசவம் ஆன நிலையில் தனுஜா பார்திக்கு ரத்தப்போக்கு அதிகரித்ததால் வாடா ஊரக ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மயங்கிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த தனுஜாபார்தி நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி அளவில் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தை பலியான நிலையில் இளம்பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story