மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: அரையிறுதியில் சாய்னா தோல்வி

x
தினத்தந்தி 19 Jan 2019 11:55 AM IST (Updated: 19 Jan 2019 11:55 AM IST)
மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் சாய்னா நேவால் தோல்வி அடைந்து வெளியேறினார்.
கோலாலம்பூர்,
மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால், ஸ்பெயின் நாட்டைச்சேர்ந்த 3 முறை உலக சாம்பியனான கரோலினா மரினை எதிர்கொண்டார்.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், போட்டி முழுவதும் கரோலினா மரினே ஆதிக்கம் செலுத்தினார். இறுதியில், 16-21, 13-21 என்ற செட் கணக்கில் சாய்னா தோல்வி அடைந்து போட்டித்தொடரில் இருந்து வெளியேறினார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





