வேலூர்: குளத்தில் மூழ்கி 4 பெண்கள் பலி - குலதெய்வம் கோவிலுக்கு சென்றபோது பரிதாபம்


வேலூர்: குளத்தில் மூழ்கி 4 பெண்கள் பலி - குலதெய்வம் கோவிலுக்கு சென்றபோது பரிதாபம்
x

4 Women Died While drowning in Pond Vellore

வேலூர்,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வேப்பூர் தங்கம் பகுதியை சேர்ந்த 4 பெண்கள் உள்பட குடும்பத்தினர் வனப்பகுதியில் உள்ள தங்கள் குலதெய்வ கோவிலான முனீஸ்வரன் கோவிலுக்கு இன்று காலை சென்றுள்ளனர்.

கோவிலில் வழிபாடு செய்தபின் மாலை 5 மணியளவில் 4 பெண்களும் கோவில் அருகே உள்ள குளத்தில் குளித்துள்ளனர். அப்போது, குளத்தில் ஆழம் அதிகமாக இருந்த நிலையில் 4 பெண்களும் நீரில் மூழ்கியுள்ளனர்.

நீரில் மூழ்கிய 4 பெண்களும் உயிரிழந்தனர். இதையடுத்து விரைந்து வந்த உறவினர்கள், கிராமத்தினர், போலீசார் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 4 பெண்களின் உடல்களையும் மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story