மூவலூர் மார்க்க சகாயேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்
கொரோனா தொற்று நீங்க வேண்டி மூவலூர் மார்க்க சகாயேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை அருகே மூவலூர் கிராமத்தில் மார்க்க சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கொரோனா தொற்று நீங்க வேண்டி 1,008 சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக 1008 வலம்புரி சங்குகளை சிவலிங்கம் வடிவில் அடுக்கப்பட்டு, அதில் புனித நீர் ஊற்றப்பட்டு யாகம் நடந்தது. இதை தொடர்ந்து சங்குகளில் இருந்த புனித நீரால் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் 108 மூலிகைகளால் கொரோனா தடுப்பு ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மகாபூர்ணாகுதி செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story