தீபாவளி நாளில் சென்னையில் 148 இடங்களில் தீ விபத்து - தீயணைப்புத்துறை தகவல்


தீபாவளி நாளில் சென்னையில் 148 இடங்களில் தீ விபத்து - தீயணைப்புத்துறை தகவல்
x

தீ விபத்துகளில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தீயணைப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்றைய தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து புத்தாடைகள் அணிந்து, இனிப்புகளை பகிர்ந்து, பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதனிடையே பட்டாசு வெடித்து சில இடங்களில் தீ விபத்துகளும் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில் சென்னையில் தீபாவளி நாளில் மொத்தம் 148 இடங்களில் பட்டாசுகளால் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த விபத்துகளில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூர் சாய்பாபா கோவில், கொளத்தூர் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடு, பெரியமேடு பகுதியில் உள்ள கடை, வண்ணாரப்பேட்டையில் உள்ள குடோன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டன. இந்த விபத்துகளால் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும், விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story