அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் கைது


அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் கைது
x

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்

சாத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்காதர் மற்றும் போலீசார் மேட்டமலை அருகில் உள்ள சின்னவாடி மெயின் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு பட்டாசு ஆலையின் அருகில் சிலர் உரிய அனுமதியின்றி பட்டாசுகளை தயாரித்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சிவகாசியை சேர்ந்த விஜயன் (வயது 38), ஜனார்த்தனன் (42) ஆகியோரை கைது செய்தனர்.


Next Story