மதுரையில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது


மதுரையில்  குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
x

மதுரையில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை


மதுரை திருநகர் பாண்டியன் நகர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் காசி மகன் விஸ்வா (வயது 20). திருநகர் நெல்லையப்பபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜீவா மகன் ராஜ் (வயது 27). நகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story