மதுபாட்டில்கள் ,சாராயம் கடத்திய 2 பேர் கைது

மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்
திண்டிவனம்,
திண்டிவனம் அருகே வெள்ளிமேடுபேட்டை போலீசார் அப்பகுதியில் உள்ள பஜாரில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே செப்பங்குளம்பகுதியை சேர்ந்த முருகன் மகன் விஜயகுமார் (வயது 22), அசோகன் மகன் விஜயகுமார் (26) என்பதும், மோட்டார் சைக்கிளில் 140 மதுபாட்டில்கள், 10 லிட்டர் சாராயத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள், சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story






