கல்லூரி மாணவர் கொலை வழக்கில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது


கல்லூரி மாணவர் கொலை வழக்கில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x

திருவெண்ணெய்நல்லூர் அருகே கல்லூரி மாணவர் கொலை வழக்கில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே டி.எடையார் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் சரத்ராஜ் என்கிற சரத் (வயது 21), கண்டாச்சிபுரம் அருகே அருளவாடியை சேர்ந்த ராமு மகன் ராஜேஷ் (19). இவர்கள் இருவரும் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த மாதம் 20-ந் தேதியன்று டி.எடையாரை சேர்ந்த கல்லூரி மாணவர் அருண் (19) என்பவரை முன்விரோத தகராறு காரணமாக கொலை செய்துவிட்டு உடலை கிணற்றில் வீசிச்சென்ற சம்பவம் தொடர்பாக சரத்ராஜ், ராஜேஷ் ஆகியோரை திருவெண்ணெய்நல்லூர் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதை தொடர்ந்து இவர்களுடைய குற்ற செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார். அதன்பேரில் சரத்ராஜ், ராஜேஷ் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவிட்டார்.

இதையடுத்து சரத்ராஜ், ராஜேஷ் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவர்கள் இருவருக்கும் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.


Next Story