அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்த 2 பேர் கைது


அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்த 2 பேர் கைது
x

அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்


வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் தாயில்பட்டி பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள பஸ்நிறுத்தத்தில் சாக்கு பையுடன் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர். அதில் சாக்கு பையில் அனுமதியின்றி தயார் செய்யப்பட்ட சரவெடிகள் மற்றும் பேன்சி ரக வெடிகள் வைத்திருந்ததும், ரங்கசாமி (வயது 40), கார்த்திகேயன் (45) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார், மேற்படி 2 பேரையும் கைது செய்தனர்.



Next Story