மோட்டார் சைக்கிள்களை திருடிய 17 வயது சிறுவன் உள்பட 2 பேர் கைது


மோட்டார் சைக்கிள்களை திருடிய 17 வயது சிறுவன் உள்பட 2 பேர் கைது
x

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 17 வயது சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியில் குற்றப்பிரிவு ஆய்வாளர் டில்லிபாபு தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக அந்த வழியாக வந்து 17 வயது சிறுவனை மடக்கி பிடித்து விசாரித்த போது சிறுவன் முன்னுக்கு பின் முரனாக பதில் அளித்தார். அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுவன் பண்ருட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அன்பு என்கின்ற அன்பரசன் (23) என்பவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரிய வந்தது.

சிறுவன் கொடுத்த தகவலின் பேரில் அன்பரசனை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதில் மீஞ்சூர், அம்பத்தூர், திருவேற்காடு, வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 4 மாதங்களாக விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை திருடி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்த மீஞ்சூர் போலீசார் அவர்களிடமிருந்து 14 விலை உயா்ந்த மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். மோட்டார் சைக்கிள்களை திருடிய அன்பு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் 17 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கும் அனுப்பி வைத்தனர்.


Next Story