டிசம்பர் 21 ஆம் தேதி ஆர்.கே.நகர் தேர்தல்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு


டிசம்பர் 21 ஆம் தேதி ஆர்.கே.நகர் தேர்தல்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 24 Nov 2017 4:50 AM GMT (Updated: 24 Nov 2017 4:49 AM GMT)

டிசம்பர் 21 ஆம் தேதி ஆர்.கே.நகர் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சென்னை,

முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதிக்கு டிசம்பர் 31–ந்தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல் கமி‌ஷன் தீவிரமாக ஆலோசனை நடத்தியது. இந்த நிலையில், ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் என்று  இந்திய தேர்தல் ஆணையம்  அறிவித்துள்ளது. 

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நவம்பர் 27 ஆம் தேதி துவங்குகிறது. வேட்பு மனுவை தாக்கல் செய்ய டிசம்பர் 4 ஆம் தேதி கடைசி நாளாகும். டிசம்பர் 5 ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும்.  வேட்பு மனுக்களை திரும்ப பெற 7 ஆம் தேதி கடைசி நாளாகும்.

 டிசம்பர் 24 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்திருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story