தே.மு.தி.க. சார்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி விஜயகாந்த், அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்பு


தே.மு.தி.க. சார்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி விஜயகாந்த், அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்பு
x
தினத்தந்தி 2 Jun 2019 10:00 PM GMT (Updated: 2 Jun 2019 8:41 PM GMT)

தே.மு.தி.க. சார்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் விஜயகாந்த், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை,

தே.மு.தி.க. சார்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இதில் கட்சியின் தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், அமைச்சர் டி.ஜெயக்குமார், வக்பு வாரிய தலைவர் அன்வர் ராஜா எம்.பி., த.மா.கா. துணைத் தலைவர் கோவை தங்கம், பா.ம.க. அமைப்பு செயலாளர் மு.ஜெயராமன், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், “முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதில் பங்கு பெறுவதாக இருந்தது. ஆனால் அவருக்கு வேறு நிகழ்ச்சியில் இருந்ததால் என்னை அனுப்பி வைத்திருக்கிறார். தமிழ்நாட்டில் எத்தனை கட்சிகள் இருந்தாலும் இஸ்லாமியர்களை கவுரவப்படுத்துவது அ.தி.மு.க.வும், தே.மு.தி.மு.க. வும் தான். சட்டசபையில் நாங்கள் ஒற்றுமையாக இருந்ததை பார்த்து கண் திருஷ்டி பட்டுவிட்டதோ, என்னவோ?. நம்முடைய கட்சியிலும் ‘ஸ்லீப்பர் செல்கள்’ இருந்திருக்கிறார்கள்” என்றார்.

விஜயகாந்த் பேசும்போது, “அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துகள்” என்றார்.

Next Story