அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு: அரசாணை பிறப்பித்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்


அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத  இட ஒதுக்கீடு: அரசாணை பிறப்பித்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
x
தினத்தந்தி 9 Nov 2020 4:19 PM IST (Updated: 9 Nov 2020 4:19 PM IST)
t-max-icont-min-icon

அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக, அரசாணை பிறப்பித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை, 

சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத  இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, அரசாணை பிறப்பித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து 50 சதவீத இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்க உத்தரவிடக் கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது. 


Next Story