மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,301 கன அடியாக அதிகரித்துள்ளது.
தர்மபுரி,
தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடகா, கேரள மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த 2 அணைகளில் இருந்தும் அதிகளவு தண்ணீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இந்நிலையில் இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 72.61 அடியிலிருந்து 73.29 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 12,804 கன அடியிலிருந்து 16,301 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 35.59 டி.எம்.சியாக இருந்தது. கடந்த 2 நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 1.42 அடி உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story